குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் தமுமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம்

திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.



தமுமுகவின் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பையும் மீறி 300க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் இறங்கி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதில் தமுமுகவை சேர்ந்த ஷேக் பரீத் என்பவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி ரயில் நிலைய வளாகத்தில் தமுமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், ஷேக் பரீத்தை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதாகினர். இந்த போராட்டத்தால் திருப்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...