கோவை: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவந்த மத்திய அரசை வரவேற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் கோஷங்கள் எழுப்பினர்.
கோவை: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவந்த மத்திய அரசை வரவேற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் கோஷங்கள் எழுப்பினர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள், இயக்கங்கள் மற்றும் இதர கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டு மக்களின் நலனுக்கான சட்டம் இந்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆதரவுக் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் மத்திய அரசை வரவேற்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், மத்திய அரசின் இந்த சட்டங்களை சில அமைப்பினர் வேண்டும் என்றே தவறாக பரப்புரை செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் பிரிவினர் இந்தச் சட்டத்தை ஆதரித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.