கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை: கோவையில் பல்வேறு ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மனிதச் சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

கோவை: கோவையில் பல்வேறு ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மனிதச் சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.



நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் ,இயக்கங்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் டவுன்ஹால் பகுதிகளில் தொழுகைக்குப்பின் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள CAA, NRC, NPR. போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி அதை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் திராவிட கட்சி வழியில் வந்த அதிமுக மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.



இதன் தொடர்ச்சியாக மரக்கடை நவாப் ஹக்கீம் சாலையில் பல்வேறு ஜமாத்தினர் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மரக்கடையில் தொடங்கி வெரைட்டி ஹால் சாலை வரைக்கும் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.



இந்த போராட்டத்தில் 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை பிடித்தும் மற்றும் கைகளில் தேசிய கொடியை ஏந்தியும் தங்களின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...