11 நாட்களில் 1001 ஆசனங்கள்; கோவையில் தனிநபர் யோகாசன உலக சாதனை முயற்சி நாளை நிறைவு

கோவை: பதினோரு நாட்களில் 1001 ஆசனங்கள் செய்யும் தனிநபர் சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த உலக சாதனை யோகாசன நிகழ்ச்சி நாளை நிறைவு பெறுவதாக மரகதம் யோகாலய நிறுவனரும் யோகாசன வல்லுநரான குணசேகரன் தெரிவித்தார்.


கோவை: பதினோரு நாட்களில் 1001 ஆசனங்கள் செய்யும் தனிநபர் சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த உலக சாதனை யோகாசன நிகழ்ச்சி நாளை நிறைவு பெறுவதாக மரகதம் யோகாலய நிறுவனரும் யோகாசன வல்லுநரான குணசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பான கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய குணசேகரன், 1001 ஆசனங்கள் செய்து தனிநபர் உலக சாதனையை கடந்த 15.09.2019 அன்று துவங்கியதாகவும் பின்னர் 21.09.19 முதல் 29.09.19 வரை என மொத்தம் பத்து நாட்களில் காலை 7 மணிக்கு துவங்கி இரவு ஏழு மணிவரை 962 யோகாசனங்களை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக கோவை வைசியாள் வீதியில் உள்ள வாசவி கலையரங்கில் நாளை காலை துவங்கி மீதமுள்ள 39 ஆசனங்களை செய்து தனிநபர் உலக சாதனையை நிகழ்த்த உள்ளதாக கூறியவர், பதினோறு நாட்களில் இவ்வளவு ஆசனங்கள் செய்வது இதுவே உலகில் முதன்முறை எனவும் இதனை எலைட் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் அளிப்பார்கள் என்று கூறினார்.

இதற்கு முன் 2012ம் ஆண்டு 43 மணி நேரம் தொடர் யோகாசன செய்து சாதனை செய்துள்ளதாகவும் 2016ம் ஆண்டு அறுபத்து ஒன்பது மணி நேரம் யோகாசனம் செய்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்ததாக தெரிவித்தார். மொத்தம் எண்பது லட்சம் ஆசனங்கள் இருப்பதாக கூறிய அவர், பதினோரு நாட்களில் 1001 ஆசனங்கள் செய்து தனிநபர் சாதனை நிகழ்த்த தினமும் தொண்ணூறு முதல் தொண்ணூற்றி ஐந்து ஆசனங்கள் செய்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, ஏகபாத சிரசாஸனம், உபவிஸ்ட சிரசாஸனம், போபுர உபவிஸ்ட சிரசாஸனங்களை உள்ளிட்ட சிலவற்றை செய்து காண்பித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...