கோவை: கோவை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அபிநயா மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றார்.
கோவை: கோவை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அபிநயா மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் மகள் அபிநயா. இவர் கோவை மாவட்ட சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்ற நிலையில் இன்று காலை வெளியான முடிவுகளில் அபிநயா 21,996 வாக்குகளும், திமுக வேட்பாளர் கோமதி நடராஜன் 18,694 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் அபிநயா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோமதி நடராஜனை விட 3434 வாக்குகள் அதிகம் பெற்று மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தனது தந்தையும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுக்குட்டியுடன் வந்திருந்து தனது வெற்றிச் சான்றிதழை கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்று சென்றார்.கோவை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அபிநயா மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் மகள் அபிநயா. இவர் கோவை மாவட்ட சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்ற நிலையில் இன்று காலை வெளியான முடிவுகளில் அபிநயா 21,996 வாக்குகளும், திமுக வேட்பாளர் கோமதி நடராஜன் 18,694 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் அபிநயா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோமதி நடராஜனை விட 3434 வாக்குகள் அதிகம் பெற்று மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தனது தந்தையும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுக்குட்டியுடன் வந்திருந்து தனது வெற்றிச் சான்றிதழை கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்று சென்றார்.