காரமடை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தி.மு.க - அ.தி.மு.க மோதல்; போலீசார் தடியடி.

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் ஈடுபட்டனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சி ஆதிவாசி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயா என்ற பெண் வேட்பாளர் 59 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



இந்நிலையில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் ஈடுபட்டனர். இதில் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் ஜெயா உட்பட பலருக்கு பலத்த அடி விழுந்தது.



தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கூட்டத்தினரை கலைக்க முயன்றனர். எனினும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். தடியடிக்கு பயந்து கூட்டத்தினர் சிதறி ஓடினர். அங்கிருந்த பெண் அலுவலர்கள், முகவர்கள் அறைகளுக்குள் ஓடி கதவை மூடிக் கொண்டனர். இந்த சம்பவத்தினால் வாக்கு எண்ணும் மையம் போர்க்களம் போல் காணப்பட்டது. எனினும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளரின் வெற்றி நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...