கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளைபாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சென்னை பாளையத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுரேந்திரன் மற்றும் விக்ரம் ஆகிய 2 பேர் ஒரே ஊராட்சியில் வெற்றி பெற்றுள்ளனர்
கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட இரட்டை சகோதரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளே பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சென்னம் பாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சுரேந்திரன் மற்றும் விக்ரம் ஆகிய 2 பேர் ஒரே ஊராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்
மேட்டுப்பாளையத்தில் கடந்த 30ம் தேதி இரண்டாம் கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. இதில் பள்ளேப்பாளையம் ஊராட்சியில் 4வது வார்டுக்கு போட்டியிட்ட சுரேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். அதே ஊராட்சியில் 10வது வார்டுக்கு போட்டியிட்ட அவரது சகோதரர் விக்ரம் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 11 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்ட மனோபலம் ஊராட்சியில் இந்த இரட்டை சகோதரர்கள் வெவ்வேறு பகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளராக களம் கண்ட போதும், தற்போது இருவரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணிக்காக ஊராட்சி மன்றம் செல்ல உள்ளனர். ஒரே குடும்பத்தில் பிறந்த இந்த இரட்டைச் சகோதரர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.