திருப்பூரில் பொங்கலூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் வெற்றி; கொண்டாட்டத்தின் போது வேட்பாளரின் மகன் உயிரிழப்பு..!

திருப்பூர்: பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியம் வெற்றி பெற்ற நிலையில், கொண்டாட்டத்தின் போது அவரது மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியம் வெற்றி பெற்ற நிலையில், கொண்டாட்டத்தின் போது அவரது மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொல்லிக்காளிபாளையத்தில் திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியம் உகாயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து உகாயனூரில் திமுகவினர் பல இடங்களில் வெற்றியைக் கொண்டாடினர். அப்போது, சுப்ரமணியத்தின் வெற்றியை அவரது மகன் கார்த்திக் (21) உள்ளிட்டோர் மத்தளம் அடித்து கொண்டாடினர். இந்நிலையில், பொதுவெளியில் மத்தளம் அடித்து வந்த கார்த்திக் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அவிநாசிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...