கோவை: கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.
கோவை: கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
காவல்துறை இயக்குநர், சென்னை அவர்களின் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல்துறை இயக்குநரின் அறிவுரையின் பேரிலும், காவல்துறை தலைவர், மேற்கு மண்டலம் அவர்களின் மேற்பார்வையிலும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் (கோவை- 10, ஈரோடு - 8. திருப்பூர் - 10, நீலகிரி - 6, சேலம் - 12, நாமக்கல் - 10, தருமபுரி - 23 மற்றும் கிருஷ்ணகிரி - 10) மொத்தம் 89 முக்கிய இடங்களில் Reception Point அமைத்து வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டு இளைஞர்கள் ஜாலி ரெய்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் வாகன விதிகளை மீறியவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, சாலை விழிப்புணாவு எடுத்துரைத்ததன் விளைவாகவும், பொதுமக்கள் அதற்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாலும், பின்னர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைந்துள்ளது.
2019- இல் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் மற்றும் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் 6 ஆக இருந்த வாகன விபத்து இறப்பு வழக்குகள் 2020ஆம் ஆண்டு 2 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 66.67 % (4 இறப்பு வழக்குகள்) குறைவாகும்.
2019 -இல் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் மற்றும் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் 33 ஆக இருந்த மொத்த வாகன விபத்து வழக்குகள் 2020 -இல் 7 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 78.79% (26 மொத்த வாகன விபத்து வழக்குகள்) குறைவாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
காவல்துறை இயக்குநர், சென்னை அவர்களின் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல்துறை இயக்குநரின் அறிவுரையின் பேரிலும், காவல்துறை தலைவர், மேற்கு மண்டலம் அவர்களின் மேற்பார்வையிலும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் (கோவை- 10, ஈரோடு - 8. திருப்பூர் - 10, நீலகிரி - 6, சேலம் - 12, நாமக்கல் - 10, தருமபுரி - 23 மற்றும் கிருஷ்ணகிரி - 10) மொத்தம் 89 முக்கிய இடங்களில் Reception Point அமைத்து வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டு இளைஞர்கள் ஜாலி ரெய்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் வாகன விதிகளை மீறியவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, சாலை விழிப்புணாவு எடுத்துரைத்ததன் விளைவாகவும், பொதுமக்கள் அதற்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாலும், பின்னர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைந்துள்ளது.
2019- இல் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் மற்றும் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் 6 ஆக இருந்த வாகன விபத்து இறப்பு வழக்குகள் 2020ஆம் ஆண்டு 2 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 66.67 % (4 இறப்பு வழக்குகள்) குறைவாகும்.
2019 -இல் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் மற்றும் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் 33 ஆக இருந்த மொத்த வாகன விபத்து வழக்குகள் 2020 -இல் 7 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 78.79% (26 மொத்த வாகன விபத்து வழக்குகள்) குறைவாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.