கோவை: மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளின் வாக்குகள் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது.
கோவை: மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளின் வாக்குகள் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது.
இதில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவூத்தம்பதி ஊராட்சி தலைவர் பதவிக்கு கோமதி செந்தில் என்கிற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டார். இவரது வாக்குகள் எண்ணப்பட்டு காலை 12 மணி அளவில் வெற்றி பெற்றதாக சொல்லப்பட்டது,. ஆனால் மாலை 4 மணி நேரம் ஆகியும் சுமார் ஐந்து மணி நேரமாக இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து வேட்பாளர் கோமதி செந்தில் கூறுகையில், "நான் 900 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சசிகலா 890 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆனால் எனது வெற்றியை அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை," என்றார்.
இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே இருந்த கோமதி செந்தில் ஆதரவாளர்கள் அவரது வெற்றியை அறிவிக்க வேண்டும் என முற்றுகையிட்டனர். அதே சமயம் எதிர்தரப்பு ஆதரவாளர்களும் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என கோஷமிட்டு முற்றுகையிட்டனர்.

இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனால் மதுக்கரை வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவூத்தம்பதி ஊராட்சி தலைவர் பதவிக்கு கோமதி செந்தில் என்கிற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டார். இவரது வாக்குகள் எண்ணப்பட்டு காலை 12 மணி அளவில் வெற்றி பெற்றதாக சொல்லப்பட்டது,. ஆனால் மாலை 4 மணி நேரம் ஆகியும் சுமார் ஐந்து மணி நேரமாக இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து வேட்பாளர் கோமதி செந்தில் கூறுகையில், "நான் 900 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சசிகலா 890 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆனால் எனது வெற்றியை அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை," என்றார்.
இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே இருந்த கோமதி செந்தில் ஆதரவாளர்கள் அவரது வெற்றியை அறிவிக்க வேண்டும் என முற்றுகையிட்டனர். அதே சமயம் எதிர்தரப்பு ஆதரவாளர்களும் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என கோஷமிட்டு முற்றுகையிட்டனர்.

இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனால் மதுக்கரை வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.