கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் பட்டப்பகலில் உலா வரும் காட்டுயானைகள் கூட்டத்தை கண்டு ரசித்த ஏராளமான சுற்றுலா பயணிகள் காட்டுயானைகளை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் பட்டப்பகலில் உலா வரும் காட்டுயானைகள் கூட்டத்தை கண்டு ரசித்த ஏராளமான சுற்றுலா பயணிகள் காட்டுயானைகளை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

வால்பாறை பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் மற்றும் காட்டு யானைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக திரியும் காட்டுயானைகள் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளின் ஓரங்களில் ஓடும் சிறு நீரோடைகளில் வந்து தங்களது தாகம் தீர்த்து வருகின்றன.

இந்த நிலையில், வால்பாறை வெள்ளமலை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உணவு தேடி காஞ்சமலை சின்கோனா சாலையை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் காட்டுயானைகளை கண்டு ரசித்ததுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் வாகனங்களுடன் நின்று அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வால்பாறை பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் மற்றும் காட்டு யானைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக திரியும் காட்டுயானைகள் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளின் ஓரங்களில் ஓடும் சிறு நீரோடைகளில் வந்து தங்களது தாகம் தீர்த்து வருகின்றன.

இந்த நிலையில், வால்பாறை வெள்ளமலை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உணவு தேடி காஞ்சமலை சின்கோனா சாலையை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் காட்டுயானைகளை கண்டு ரசித்ததுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் வாகனங்களுடன் நின்று அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.