குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த காட்டெருமைகள் கூட்டம்; அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம்..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமை புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமைகள் கூட்டம் புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 35 கிராம ஊராட்சித் தலைவர், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குன்னூரில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியிலும், கோத்தகிரியில் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், கூடலூரில் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்பட்டு வருகிறது. தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது.



இந்த நிலையில், குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமைகள் கூட்டம் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு பெட்டிகள் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் வாக்கு எண்ணும் மையம் அருகே 10க்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. இதனால் மையத்தின் அருகே காத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அதிரடிப் படை, காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...