கோவை: கோவை மாவட்டத்தில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு கடந்த 27ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணி மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு கடந்த 27ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணி மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் மலுமிச்சம்பட்டி , பாலத்துறை, அரிசிபாளையம், சீரபாளையம், பிச்சனூர், மயிலேரிபாளையம், நாச்சிப்பாளையம், வழுக்குபாறை மாவுத்தம்பதி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் உள்ளன.
இதில் மாவட்ட கவுன்சிலர் 1, ஒன்றிய கவுன்சிலர்- 6, பஞ்சாயத்து தலைவர் - 9, ஊராட்சி வார்டு உறுப்பினர் - 84 என மொத்தம் 100 பதவிகளுக்கு 247 பேர் போட்டியிட்டுள்ளனர்.
74 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் 200 வாக்குப்பெட்டிகள் மதுக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் பலத்த போலீஸ் பாதுக்காப்போதுடன் வைக்கப்பட்டன.
இன்று காலை 7.30 மணியளவில் பாதுகாக்கப்பட்ட வாக்குபெட்டி அறையின் சீல் மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரி முன்னிலையில் அகற்றப்பட்டது.
முதல் கட்டமாக மாவூத்தம்பதி, ஊராட்சியில் பதிவானது வாக்கு பெட்டிகளில் 18 பெட்டிகள் சீல் காலை 8 மணிக்கு உடைக்கப்பட்டது.பெட்டி திறக்கப்பட்டு முகவர்களுக்கு காட்டப்பட்டது.
அதன் பின் நான்கு வண்ணச்சீட்டுகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. தபால் வாக்குகள் எண்னும் பணி துவங்கியது.