நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு சீட்டுக்களை பிரித்தடுக்குவதற்காக பல்வேறு அறைகளை கொண்ட நூற்றுக்கணக்கான பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு சீட்டுக்களை பிரித்தடுக்குவதற்காக பல்வேறு அறைகளை கொண்ட நூற்றுக்கணக்கான பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான் ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் 64.20 சதவீத வாக்குகள் பதிவாகின. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சி தலைவர்கள், 1 மாவட்ட ஊராட்சி தலைவர், 393 வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதற்காக 395 வாக்குச்சாவடிகள் மற்றும் 1,569 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.
பதிவான வாக்குகள் உதகையில் அரசு பாலிடெக்னிக், குன்னூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கூடலூரில் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும் வியாழக்கிழமை எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அந்தந்த வேட்பாளர்களுக்கு பிரித்து அடுக்குவதற்காகவும், நான்கு பதவிகளுக்காக உள்ள வெவ்வேறு வண்ணம் கொண்ட வாக்கு சீட்டுளை வைப்பதற்காகவும், பல அறைளை கொண்ட பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான் ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் 64.20 சதவீத வாக்குகள் பதிவாகின. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சி தலைவர்கள், 1 மாவட்ட ஊராட்சி தலைவர், 393 வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதற்காக 395 வாக்குச்சாவடிகள் மற்றும் 1,569 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.
பதிவான வாக்குகள் உதகையில் அரசு பாலிடெக்னிக், குன்னூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கூடலூரில் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும் வியாழக்கிழமை எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அந்தந்த வேட்பாளர்களுக்கு பிரித்து அடுக்குவதற்காகவும், நான்கு பதவிகளுக்காக உள்ள வெவ்வேறு வண்ணம் கொண்ட வாக்கு சீட்டுளை வைப்பதற்காகவும், பல அறைளை கொண்ட பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.