கோவை: கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
கோவை: கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சட்டம் மூலம் அதிக அளவில் பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் பல்வேறு வகையில் பல்வேறு கோணங்களில் தங்களின் கோரிக்கைகளை போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பதினொன்று முப்பது மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகே கூடிய பெண்கள் குழந்தைகள் மற்றும் என பலர் தங்களின் கைகளில் மெழுகுவர்த்தியையும், தேசிய கொடியையும் ஏந்தி டவுன்ஹால் சாலை வரைக்கும் பேரணியாக சென்றனர்.
மேலும், இதில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டது. இதைத் தொடர்ந்து பனிரெண்டே கால் மணிக்கு போராட்டம் நிறைவு பெற்றது.
ஊரே புத்தாண்டை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் சூழலில், ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சி.எ.எ மற்றும் என்.ஆர்.சி க்கு எதிராக போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர்.