திருப்பூரில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 51 கிலோ கஞ்சா, போதை பொருள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் அணைக்காடு பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக எடுத்து வந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 51 கிலோ கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அணைக்காடு பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக எடுத்து வந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 51 கிலோ கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வாகனத்தில் வந்த மாயி, தமிழ் செல்வி, ரோசின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சஞ்சீவ் குமார் உத்தரவின் பேரில் மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார், இன்று ஊத்துக்குளி சாலையில் உள்ள அணைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக எடுத்து வந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 51 கிலோ கஞ்சா போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 



அந்த வாகனத்தை ஓட்டி வந்த மாயி, தமிழ் செல்வி, ரோசின் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 



குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு ரெயில் மூலம் கஞ்சா மூட்டை வந்ததாகவும், இதனை இரு சக்கர வாகனத்தில் வைத்து மாநகர பகுதிகளில் விற்க கொண்டு செல்லும் போது போலீசார் கைது செய்துள்ளனர் என தெரிவித்தனர். 



இந்த குற்றவாளிகளை பிடித்த தனி படை போலீசாருக்கு காவல்துறை துணை ஆணையர் பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...