திருப்பூர்: தமிழகத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் இனிமையாக பழகுவதாகவும், பிரதமர் மோடி தன்னிடம் போனில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று லடாக்கில் வேலை இல்லாததால் ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் பணியாற்றி வரும் பர்வீன் பாத்திமா தெரிவித்தார்.
திருப்பூர்: தமிழகத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் இனிமையாக பழகுவதாகவும், பிரதமர் மோடி தன்னிடம் போனில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று லடாக்கில் வேலை இல்லாததால் ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் பணியாற்றி வரும் பர்வீன் பாத்திமா தெரிவித்தார்.

லடாக் கார்கில் பகுதியில் இருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள எஸ்.சி.எம் என்ற தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்து உள்ளதாகவும் பல்வேறு மாநிலங்களில் நல்ல பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் பேசினார் மேலும், திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பர்வீன் பாத்திமா(24) என்ற பெண் லடாக் அருகே உள்ள கார்கில் பகுதியில் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையும் இன்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று தற்பொழுது திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பதவி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளார் என்று தெரிவித்தார். மேலும், பர்வீன் பாத்திமாவிற்கு நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்த பிரதமர் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய பர்வீன் பாத்திமா, பிரதமர் தன்னிடம் தொலைபேசியில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் தனது பணி குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தங்கள் ஊரில் இதுபோன்ற பணிகள் மற்றும் தொழிற்சாலைகள் மேம்பாட்டு வசதிகள் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை பார்ப்பதாகவும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் இனிமையாக பழகுவதாகவும் வேலைகளுக்கான பயிற்சியும் சிறப்பாக கொடுத்ததாக கூறினார்.

மேலும், தனது பெற்றோர் இவ்வளவு தூரம் சென்று பெண் வேலை பார்க்கிறார் என கவலை அடைந்ததாகவும் ஆனால் தான் இங்கு பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறிய அவர், இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணி கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தனது பெற்றோர் மற்றும் உடன் பணிபுரியும் நண்பர்கள், நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பர்வீன் பாத்திமா தெரிவித்தார்.

லடாக் கார்கில் பகுதியில் இருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள எஸ்.சி.எம் என்ற தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்து உள்ளதாகவும் பல்வேறு மாநிலங்களில் நல்ல பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் பேசினார் மேலும், திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பர்வீன் பாத்திமா(24) என்ற பெண் லடாக் அருகே உள்ள கார்கில் பகுதியில் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையும் இன்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று தற்பொழுது திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பதவி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளார் என்று தெரிவித்தார். மேலும், பர்வீன் பாத்திமாவிற்கு நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்த பிரதமர் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய பர்வீன் பாத்திமா, பிரதமர் தன்னிடம் தொலைபேசியில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் தனது பணி குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தங்கள் ஊரில் இதுபோன்ற பணிகள் மற்றும் தொழிற்சாலைகள் மேம்பாட்டு வசதிகள் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை பார்ப்பதாகவும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் இனிமையாக பழகுவதாகவும் வேலைகளுக்கான பயிற்சியும் சிறப்பாக கொடுத்ததாக கூறினார்.

மேலும், தனது பெற்றோர் இவ்வளவு தூரம் சென்று பெண் வேலை பார்க்கிறார் என கவலை அடைந்ததாகவும் ஆனால் தான் இங்கு பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறிய அவர், இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணி கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தனது பெற்றோர் மற்றும் உடன் பணிபுரியும் நண்பர்கள், நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பர்வீன் பாத்திமா தெரிவித்தார்.