நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருகே சிறியூர் பகுதியில் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை காட்டு யானை ஒன்று வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருகே சிறியூர் பகுதியில் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை காட்டு யானை ஒன்று வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை கூடலூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், அதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சிறியூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆய்வு செய்ய சென்ற பொது, நடுவழியில் வந்த காட்டு யானை ஆட்சியர் வாகனத்தை இடைமறித்தது.
மெல்ல மெல்ல வாகனத்தை நோக்கி நகர்ந்து வந்த யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் வரை மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளில இருந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒற்றை காட்டு யானை என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதே பகுதியில் வாகனங்களை நிறுத்தி அது தானாக வனத்திற்குள் செல்லும் வரை காத்திருந்து பின்னர் சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை கூடலூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், அதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சிறியூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆய்வு செய்ய சென்ற பொது, நடுவழியில் வந்த காட்டு யானை ஆட்சியர் வாகனத்தை இடைமறித்தது.
மெல்ல மெல்ல வாகனத்தை நோக்கி நகர்ந்து வந்த யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் வரை மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளில இருந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒற்றை காட்டு யானை என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதே பகுதியில் வாகனங்களை நிறுத்தி அது தானாக வனத்திற்குள் செல்லும் வரை காத்திருந்து பின்னர் சென்றனர்.