கோவை: ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை: ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த பஞ்சாயத்து தேர்தல் நாட்டில் மிகவும் முக்கியதுவமானது என்றும் மக்களுக்கு இதன் முக்கியத்துவம் முழுமையாக தெரியவில்லை எனக் கூறினார்.
மேலும், பஞ்சாயத்து அமைப்பு கிராமத்தில் உள்ள சிறிய பார்லிமெண்ட் போன்றது என்றும் கிராம மக்கள் தேவையை தீர்மானித்து, உடனுக்குடன் தீர்வு கொண்டு வர வாய்ப்பு உள்ளதால், மக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தினார்.
பொறுப்பாக இருப்பவர்கள் என நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கட்சி, மதம், சாதி வேறுபாடின்றி யார் பொறுப்பாக கிராம முன்னேற்றத்திற்காக செயல்படுவார்கள் என பார்த்து வாக்களிக்க அவர் வலியுறுத்தினார்.