கோவை: குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் திமுக மகளிரணியினர் வீட்டின் முன்பு கோலங்கள் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை: குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் திமுக மகளிரணியினர் வீட்டின் முன்பு கோலங்கள் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் இட்டவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவிக்க ஆணையிட்டார்.
அதன்படி கோவை, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டப்பாளையத்தில், திமுக மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் இங்குள்ள வீடுகளுக்கு முன்பு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டுள்ளனர். "வேண்டாம் CAA - NRC" என்று குறிப்பிட்டு கோலமிட்டிருந்தனர்.
இது குறித்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தால் ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மகளிர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளோம். இந்த சட்டத்தை வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.