கோவையில் திமுக பிரமுகர் வீட்டில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்



கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரில் தி.மு.க. பிரமுகர்

ஆனந்தனுக்கு சொந்தமான

சொகுசு பங்களா ஒன்று உள்ளது. 

இவர் இந்த பங்களாவை ஷேக் மற்றும் ரசித் ஆகிய இருவருக்கும் வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் இவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பங்களாவில் பதுக்கி வைத்து, பல்வேறு வகையில் பண மோசடிகள் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அந்த பங்களாவிற்கு அடிக்கடி சந்தேகத்திற்குரிய நபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இப்படியிருக்க இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய புலனாய்வுத் பிரிவினர் கோவை மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் அந்த பங்களாவில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 268 கட்டுகள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பழைய ரூபாய் கட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல திமுக பிரமுகர் ஆனந்தனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசார் சோதனைக்காக வந்த பொழுது தப்பிச்சென்ற இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...