கோவை: பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுஷ்மிதா தொடர்ந்து மூன்று மணி நேரம் மல்லர்கம்ப உடல்வித்தை செய்து மூன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுஷ்மிதா தொடர்ந்து மூன்று மணி நேரம் மல்லர்கம்ப உடல்வித்தை செய்து மூன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை காக்கும் விதமாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாரம்பரிய கலைகள் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் கோவை நேரு யுவ கேந்திரா சார்பில் பாரம்பரிய கலைகளில் சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
குறிப்பாக சிலப்பாட்டம், பறை இசை மற்றும் மல்லர்கம்ப உடல்வித்தை விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கோவை அடுத்த பொள்ளாச்சியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஷ்மிதா தொடர்ந்து 3மணி நேரம் மல்லர்கம்ப உடல்வித்தை நிகழ்வை நிகழ்த்தினார். அந்தரத்தில் கட்டபட்ட கயிற்றில் தொங்கியவாரு இந்த மல்லர்கம்ப உடல்வித்தை செய்தவர், சில யோகாசனங்களை செய்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும், இந்த நிகழ்வின் மூலம் ஒரே நேரத்தில் கலாம் சாதனை புத்தகம், பாரத் சாதனை புத்தகம் மற்றும் அதிசய சாதனை புத்தகம் என மூன்று சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சுஷ்மிதா கூருகையில், மல்லர்கம்ப உடல்வித்தை என்பது பாரம்பரிய கலை என்றும் இதனை தான் தனது 5வயது முதல் கற்று வருவதாகவும் இடையில் 10வகுப்பு பொது தேர்வு காரணமாக இரண்டு வருடம் இந்த மல்லர்கம்ப வித்தையை பயிற்சி செய்ய முடியாமல் போனதாக தெரிவித்தவர் கடந்த ஒரு மாத பயிற்சியால் தற்போது இந்த உலக சாதனையை நிகழ்த்தியுருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் நல்ல உருதுணையாகவும் ஒத்திழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தவர், தான் மேன்மேலும் இது போன்ற சாதனை படைக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என தெரிவித்தார்.