கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்று படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கி தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகின்றது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்று படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கி தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகின்றது.
முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் முகாமில் பங்கேற்று புத்துணர்வு பெற்று வருகின்றன.
தினசரி காலை மாலை 2 வேளையும் யானைகளுக்கு நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் ஷவர் மற்றும் குளியல் மேடையில் யானைகள் குளித்து மகிழ்கின்றன.அதன் பின்னர் யானைகளுக்கு சமச்சீர் உணவுடன் ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன மேலும் மருத்துவக்குழுவினர் யானைகளை பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
முகாம் துவங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிய நிலையில் யானைகள் நல்ல முறையில் பராமரிக்கபட்டு வருவதால் பகலிலேயே படுத்து ஓய்வெடுத்து வருகிறது.

பொதுவாக யானைகள் தரையில் படுத்து தூங்குவது என்பது மிக அறிது, இயற்கையான சூழலில் இதமான தட்பவெப்பம் காரணமாக கோவில்யானைகள் முகாமில் பகலிலேயே மெய் மறந்து படுத்து உறங்கி வருகிறது.
பசுந்தீவனங்களையும் கலவை சாதங்களையும் உண்டு ருசிக்கும் கோவில் யானைகள் உண்ட மயக்கத்தில் ஒய்யாரமாக படுத்து ஒய்வு எடுத்து வருகிறது.
முகாமினை பார்க்க வரும் மக்கள் மற்றும் குழந்தைகள், யானைகள் மெய் மறந்து தூங்கும் காட்சியினை தங்கள் கைப்பேசிகளில் வீடியோ எடுத்து ரசித்து வருகின்றனர்.
முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் முகாமில் பங்கேற்று புத்துணர்வு பெற்று வருகின்றன.
தினசரி காலை மாலை 2 வேளையும் யானைகளுக்கு நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் ஷவர் மற்றும் குளியல் மேடையில் யானைகள் குளித்து மகிழ்கின்றன.அதன் பின்னர் யானைகளுக்கு சமச்சீர் உணவுடன் ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன மேலும் மருத்துவக்குழுவினர் யானைகளை பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
முகாம் துவங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிய நிலையில் யானைகள் நல்ல முறையில் பராமரிக்கபட்டு வருவதால் பகலிலேயே படுத்து ஓய்வெடுத்து வருகிறது.

பொதுவாக யானைகள் தரையில் படுத்து தூங்குவது என்பது மிக அறிது, இயற்கையான சூழலில் இதமான தட்பவெப்பம் காரணமாக கோவில்யானைகள் முகாமில் பகலிலேயே மெய் மறந்து படுத்து உறங்கி வருகிறது.
பசுந்தீவனங்களையும் கலவை சாதங்களையும் உண்டு ருசிக்கும் கோவில் யானைகள் உண்ட மயக்கத்தில் ஒய்யாரமாக படுத்து ஒய்வு எடுத்து வருகிறது.
முகாமினை பார்க்க வரும் மக்கள் மற்றும் குழந்தைகள், யானைகள் மெய் மறந்து தூங்கும் காட்சியினை தங்கள் கைப்பேசிகளில் வீடியோ எடுத்து ரசித்து வருகின்றனர்.