ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடவே 3 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க அரசு தள்ளிப்போட்டது - அப்பாவு, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ

கோவை: ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடவே மூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க அரசும் அமைச்சர் வேலுமணியும் தள்ளிப்போட்டதாக மேட்டுப்பாளையத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை: ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடவே மூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க அரசும் அமைச்சர் வேலுமணியும் தள்ளிப்போட்டதாக மேட்டுப்பாளையத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தி.மு.க சார்பில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தி.மு.கவை சேர்ந்த அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒன்றிய மாவட்ட பஞ்சாயத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான அப்பாவு ஓடந்துரை, சிக்கதாசம்பாளையம்,உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அப்பாவு, ஊரக பகுதிகளில் தெரு விளக்குகள் பொருத்துவதில் மட்டும் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும் தொடர்ந்து பல்வேறு வழியில் பணம் சம்பாதிக்க உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் அது அமைச்சருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் என்பதாலேயே மூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், தற்போது தி.மு.க வழக்கு தொடர்ந்ததால் தான் உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக கூறினார்.

மேலும், விரைவில் அமைச்சர் வேலுமணி குறித்த ஊழல் வழக்குகள் வர உள்ளதால் அவர் விரைவில் சிறைச்செல்வார் என பேசிய அப்பாவு, உள்ளாட்சியில் ஊழல் அற்ற நிர்வாகம் செய்ய தி.மு.க வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...