பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான மெமோ ரயில் போக்குவரத்து இரண்டு நாட்கள் ரத்து

கோவை: இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - கோவை இடையே புதியதாக துவங்கப்பட்டுள்ள மெமோ ரயில் போக்குவரத்து நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - கோவை இடையே புதியதாக துவங்கப்பட்டுள்ள மெமோ ரயில் போக்குவரத்து நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவை மாநகருக்கு தினசரி ரயில் 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. காலை முதல் மாலை வரை நாள் ஒன்றிக்கு எட்டு முறைக்கும் மேல் இயக்கப்படும் இந்த ரயிலை பள்ளி,கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் இதர தேவைகளுக்காக ஒரு நாளைக்கு 50,000க்கும் மேற்பட்டோர் இதில் பயணித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த மாதம் இந்த ரயில் சேவையை நவீனப்படுத்தும் விதமாக தெற்கு ரயில்வே கோவை மேட்டுப்பாளையத்திற்கு மெமோ ரயிலை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் தடத்தில் இயக்கப்பட்டு வந்த மெமோ ரயில் போக்குவரத்து 28, 29 ஆகிய தேதிகளான நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் இருப்பு பாதைகளில் பராமரிப்பிற்கான பணிகள் நாளை முதல் துவங்கி இரு தினங்களுக்கு நடத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு தினங்களுக்கு மேட்டுப்பாளையம் கோவை இடையிலான மெமோ ரயில் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்பிரஸ் ரயில் வழக்கம் போல் செயல்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...