கோவை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு நடைபெற்ற நேர்காணல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தது. துப்புரவு தொழிலாளர்களின் நியமனத்தை நிறுத்தி வைக்கவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...