உதகையில் விபத்துக்களை தடுக்க கொரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி: தமிழகத்தில் முதன்முறையாக மலைப்பிரதேசங்களில் விபத்துக்களை தடுக்க காெரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உதகையில் நடைபெற்று வருகிறது.

நீலகிரி: தமிழகத்தில் முதன்முறையாக மலைப்பிரதேசங்களில் விபத்துக்களை தடுக்க காெரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உதகையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலுள்ள நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பிரதேசங்களில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர் சேதம் நடக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் முதன்முறையாக தனியார் உதவியுடன் மாநில நெடுஞ்சாலைத்துறை சோதனை ஓட்டமாக நீலகிரி மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் கொரியா நாட்டில் விபத்துக்களை தடுக்க பயன்படுத்தப்படும் கொரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்புச் சுவர்களை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, உதகையில் இருந்து கல்லட்டி வழியாக 36 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி, மைசூர் செல்லும் மிக ஆபத்தான மலைப்பாதையான கல்லட்டி மலைப்பாதையில் கொரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்பு சுவர்களை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த முயற்சி இப்பகுதியில் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் உள்ள மலைப் பாதைகளில் இதுபோன்ற உருளை தடுப்புச் சுவர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...