கோவை: மேட்டுப்பாளையத்தில் தி.மு.க ஊராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க இலவசமாக ஏணி தரப்படும் என கூறி இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் தி.மு.க ஊராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க இலவசமாக ஏணி தரப்படும் என கூறி இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில், இன்று தி.மு.க சார்பில் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் ஒன்றிய மாவட்ட பஞ்சாயத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனம் மூலம் ஊர் ஊராக சென்று பேரணி நடத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்
சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்ப்பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது கருப்பராயன் குட்டை, சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராமங்களில் பேசிய தி.மு.க வேட்பாளர்கள், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க ஏணி இலவசமாக வழங்கப்படும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில், இன்று தி.மு.க சார்பில் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் ஒன்றிய மாவட்ட பஞ்சாயத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனம் மூலம் ஊர் ஊராக சென்று பேரணி நடத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்
சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்ப்பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது கருப்பராயன் குட்டை, சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராமங்களில் பேசிய தி.மு.க வேட்பாளர்கள், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க ஏணி இலவசமாக வழங்கப்படும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.