கோவை: கோவை சீரநாயக்கன்பாளையத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பெரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை சீரநாயக்கன்பாளையத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பெரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 26ஆம் தேதி கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தனது உறவினருடன் பிறந்தநாள் கொண்டாட அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு வந்த
11ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆடைகளை அகற்றி மொபைலில் வீடியோ பதிவு செய்ததுடன், பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.
இதுதொடர்பாக பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததையடுத்து மேற்கு பகுதி ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதேப்பகுதியை சேர்ந்த கார்த்திக், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் கைதாகியுள்ள மணிகண்டன், கார்த்திக் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 5U READ WITH 9G - பொது இடத்தில் ஆடைகளின்றி மோசமாக பாலியல் துன்புறுத்தல் செய்வது, 6 read with 7, 10 - பாலியல் தொந்தரவு, 13 read with 14 - ஆடைகள் இன்றி ஆபாசமாக மொபைலில் காட்சிப்படுத்துதல், 17 - கூட்டாக குற்றத்தை செய்ய தூண்டுதல் என 4 பிரிவுகள் போக்ஸோ சட்டத்தின் படி மற்றும் 354 IPC - மானபங்கம் படுத்துதல், 506(2) IPC - கொலை மிரட்டல் ஆகிய 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான 6 பேர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டமான தமிழ்நாடு தடுப்புக்காவல் சட்டம் 1982ன் கீழ் தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை கோவை மத்திய சிறையில் அடுக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் வழங்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 26ஆம் தேதி கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தனது உறவினருடன் பிறந்தநாள் கொண்டாட அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு வந்த
11ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆடைகளை அகற்றி மொபைலில் வீடியோ பதிவு செய்ததுடன், பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.
இதுதொடர்பாக பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததையடுத்து மேற்கு பகுதி ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதேப்பகுதியை சேர்ந்த கார்த்திக், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் கைதாகியுள்ள மணிகண்டன், கார்த்திக் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 5U READ WITH 9G - பொது இடத்தில் ஆடைகளின்றி மோசமாக பாலியல் துன்புறுத்தல் செய்வது, 6 read with 7, 10 - பாலியல் தொந்தரவு, 13 read with 14 - ஆடைகள் இன்றி ஆபாசமாக மொபைலில் காட்சிப்படுத்துதல், 17 - கூட்டாக குற்றத்தை செய்ய தூண்டுதல் என 4 பிரிவுகள் போக்ஸோ சட்டத்தின் படி மற்றும் 354 IPC - மானபங்கம் படுத்துதல், 506(2) IPC - கொலை மிரட்டல் ஆகிய 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான 6 பேர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டமான தமிழ்நாடு தடுப்புக்காவல் சட்டம் 1982ன் கீழ் தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை கோவை மத்திய சிறையில் அடுக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் வழங்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.