கோவை: வால்பாறை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் சோலையார் அணையின் நீர் மட்டம் 132 அடியாக குறைந்துள்ளது.
கோவை: வால்பாறை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் சோலையார் அணையின் நீர் மட்டம் 132 அடியாக குறைந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் மூலாதாரமாக விளங்கும் சோலையார் அணை உள்ளது. இந்த அணை மூலம் பரம்பி குளம் வழியாக கேரளா, ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு நீர் செல்கிறது. இங்கிருந்து ஆனைமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம் மற்றும் கரூர் வரை பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில், சோலையார் அணையின் நீர் மட்டம் 165 அடியிலிருந்து 132 அடியாக குறைந்துள்ளது. சோலையார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான சின்னகல்லார் நீரார் அணைகளுக்கு வரும் ஊற்று நீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது. கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, நல்லகாத்து ஆறு உட்பட பல ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து மிகவும் குறைந்து ஆறுகள் குட்டைகளாக மாறி விட்டது.
மேலும் சோலையார் அணைக்கு 91 கன அடி நீரே வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து இரண்டு மின் நிலையங்கள் மூலம் 835 கன அடி நீர் மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது. இதன் காரணமாக சோலையார் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. மழை தொடர்ந்து கிடைக்காத நிலையில் சோலையார் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் மூலாதாரமாக விளங்கும் சோலையார் அணை உள்ளது. இந்த அணை மூலம் பரம்பி குளம் வழியாக கேரளா, ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு நீர் செல்கிறது. இங்கிருந்து ஆனைமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம் மற்றும் கரூர் வரை பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில், சோலையார் அணையின் நீர் மட்டம் 165 அடியிலிருந்து 132 அடியாக குறைந்துள்ளது. சோலையார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான சின்னகல்லார் நீரார் அணைகளுக்கு வரும் ஊற்று நீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது. கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, நல்லகாத்து ஆறு உட்பட பல ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து மிகவும் குறைந்து ஆறுகள் குட்டைகளாக மாறி விட்டது.
மேலும் சோலையார் அணைக்கு 91 கன அடி நீரே வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து இரண்டு மின் நிலையங்கள் மூலம் 835 கன அடி நீர் மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது. இதன் காரணமாக சோலையார் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. மழை தொடர்ந்து கிடைக்காத நிலையில் சோலையார் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.