கோவை: கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கோவையில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா தூய மிக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது.
கோவை: கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கோவையில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா தூய மிக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா டவுன்ஹால் அருகில் உள்ள தூய மைக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் அனைத்து திருச்சபைகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது. இதில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல், நடனங்கள், கிறிஸ்து பிறப்பு குறு நாடகம் நடைபெற்றது.
இதில் கோவை மறை வாட்ட கத்தோலிக்க திருச்சபை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், முதன்மை குரு ஜான் ஜோசப், சி.எஸ்.ஐ பேராயர் திமோத்தி ரவீந்தர், டி.ஈ.எல்.சி கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் மனுவேல் செல்லப்பா, பெந்தகோஸ்தே சபைகளின் சார்பாக போதகர் ஹேரி கோம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாட்டு தொழுவத்தில் குழந்தை ஏசு பிறந்ததை நினைவு கூறும் வகையில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சபைகளின் பாடகர்கள் கிறிஸ்து பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.