குன்னூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் நேரில் ஆய்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயிலை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சுப்பாராவ் நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயிலை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சுப்பாராவ் நேரில் ஆய்வு செய்தார்.

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இந்த நிலையில், தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சுப்பாராவ் குன்னூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது, ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கவரும் விதமாக புதியதாக ரயில்வே கேப்டன் கோட் மற்றும் தொப்பி அணிந்த ரயில் என்ஜின் முன் நின்று புகைப்படம் எடுக்கும் லாேகாே பைலட் முறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதற்கென சிறிய தொகையை வசூலிக்கப்படும் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், குன்னூர் முதல் ரன்னிமேடு வரை இயக்கப்பட்ட மலை ரயில் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என்றும், உதகை - கேத்தி இடையிலான சிறப்பு மலை ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தென்னக சேலம் கோட்ட முதன்மை மண்டல மேலாளர் (வணிகம்) ஹரிகிருஷ்ணன், முதன்மை மண்டல செயல் மேலாளர் ஹிரி, முதன்மை மண்டல தொழில்நுட்ப பிரிவு மேலாளர் முகந்தன்.குன்னூர் ரயில் நிலைய மேலாளர் பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...