கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் செட்டில்மென்ட் என்றழைக்கப்படும் 23 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இவர்கள் மருத்துவ வசதிக்காக பல கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வால்பாறை நகருக்கு வந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க சிறப்பு மருத்துவக் குழு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, கல்லார் செட்டில்மென்டைச் சேர்ந்த 23 குடும்பத்தினருக்கு இரத்த அழுத்தம்.சர்க்கரை அளவு பொது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. மேலும், முகாமில் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் மருத்துவர் பரத், வனவர் விஷ்ணு, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், தேயிலைத் தோட்ட அலுவலர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் செட்டில்மென்ட் என்றழைக்கப்படும் 23 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இவர்கள் மருத்துவ வசதிக்காக பல கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வால்பாறை நகருக்கு வந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க சிறப்பு மருத்துவக் குழு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, கல்லார் செட்டில்மென்டைச் சேர்ந்த 23 குடும்பத்தினருக்கு இரத்த அழுத்தம்.சர்க்கரை அளவு பொது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. மேலும், முகாமில் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் மருத்துவர் பரத், வனவர் விஷ்ணு, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், தேயிலைத் தோட்ட அலுவலர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.