கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலுக்காக 1,520 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 224 கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலுக்காக 1,520 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 224 கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள 228 ஊராட்சிகளுக்கும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. இந்நிலையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டத்தில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பறக்கும் படைக் குழுவில் தாசில்தார் நிலையிலான அதிகாரி உள்பட 3 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக 12 ஒன்றியங்களிலும் 1,520 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 224 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளன.
கோவை மாவட்டத்திலுள்ள 228 ஊராட்சிகளுக்கும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. இந்நிலையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டத்தில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பறக்கும் படைக் குழுவில் தாசில்தார் நிலையிலான அதிகாரி உள்பட 3 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக 12 ஒன்றியங்களிலும் 1,520 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 224 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளன.