கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக மத்திய அரசு இம்மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள்,முஸ்லீம் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டி சட்ட கல்லூரி முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் டெல்லியில் மாணவர்கள் ஈடுபட்ட ஆர்ப்பாட்டத்தில் போலீசார் மாணவர்களை தாக்கியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பதாதைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 22க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.