குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் நாளை ஆர்ப்பாட்டம்; பொது அமைதிக்கு பங்கம்‌ விளைவித்தால் கடும் நடவடிக்கை - கோவை மாநகர காவல்‌ துறையினர்‌

கோவை: குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கருப்பு கொடி கட்டி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், பொது அமைதிக்கு / பொதுமக்களுக்கு பங்கம்‌ விளைவிக்க முற்படுவோர்‌ மீது கடுமையான, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என கோவை மாநகர காவல்‌ துறையினர்‌ தெரிவித்துள்ளனர்.

கோவை: குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கருப்பு கொடி கட்டி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், பொது அமைதிக்கு / பொதுமக்களுக்கு பங்கம்‌ விளைவிக்க முற்படுவோர்‌ மீது கடுமையான, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என கோவை மாநகர காவல்‌ துறையினர்‌ தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவினை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில்‌, நாளை கோவை மாவட்ட அனைத்து சுன்னத்‌ ஜமாத்‌ கூட்டமைப்பு மற்றும்‌ பல்வேறு இஸ்லாம் அமைப்புகள்‌ இணைந்து மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு, கருப்பு கொடியேற்றுதல்‌, பொதுக்கூட்டம்‌, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம்‌ மற்றும்‌ பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இ‌ந்த நிலையில், பொதுமக்களின்‌ அன்றாட வாழ்க்கைக்கு எந்த விதமான இடையூறும்‌ ஏற்படா வண்ணம்‌ கோவை மாநகர காவல்துறை சார்பில்‌ பலத்த போலீஸ்‌ பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. சுமார்‌ 2500 காவலர்கள்‌ இந்த பாதுகாப்பு பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. அனைத்து பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, பேருந்துகள்‌, கடைகள்‌ அனைத்தும்‌ வழக்கம்‌ போல்‌ செயல்படும்‌. இதனால்‌ பொதுமக்கள்‌ யாரும்‌ அச்சம்‌ அடைய வேண்டியதில்லை. யாரேனும்‌ சட்ட விரோதமாக கட்டாய கடையடைப்போ, பேருந்து / இரயில்களை மறிக்கவோ, பொது இடத்தில்‌ எவ்வித அனுமதியின்றி ஒன்று கூடவோ, பள்ளி / கல்லூரிகளை மூடவோ, அரசு அலுவலகங்களை முற்றுகையிடவோ, பொது சொத்துக்களுக்கு சேதம்‌ விளைவிக்கவோ, எந்த விதத்திலும்‌ பொது அமைதிக்கு / பொதுமக்களுக்கு பங்கம்‌ விளைவிக்க முற்படுவோர்‌ மீது காவல்துறை சார்பில்‌ இந்திய தண்டனைச்‌ சட்டம்‌ மற்றும்‌ இதர சட்ட பிரிவுகளின்‌ கீழ்‌ கடுமையான, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என கோவை மாநகர காவல்‌ துறையினர்‌ தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...