மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம்; பசுந்தீவனங்களை ருசி பார்க்கும் யானைகள்

கோவை: மேட்டுப்பாளையம் உள்ள தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு கேரள கூந்தபனை உள்ளிட்ட ஜந்து வகையான பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது

கோவை: மேட்டுப்பாளையம் உள்ள தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு கேரள கூந்தபனை உள்ளிட்ட ஜந்து வகையான பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த திருக்கோவில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 28 யானைகள் பங்கேற்றுள்ளன.

வருடம் முழுவதும் மக்களின் மத்தியில் அதீத சப்தங்களுக்கு இடையே ஆலய பணிகளை மேற்கொள்ளும் யானைகளுக்கு முகாமில் புத்துணர்ச்சி அளிக்கவும் அவற்றின் உடல் நலனை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக யானைகள் வன விலங்குகள் என்பதால் அவைகளுக்கு பசுந்தீவனங்கள் மீதே அதீத தேவை இருக்கும், ஆனால் கோவில்களில் போதுமான அளவிற்கு பசுந்தீவனங்களை அளிக்க முடியாமல் போவதால் சாத உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.



இதனால் முகாமில் யானைகளுக்கு அவைகள் விரும்பி உண்ணும் ஜந்து வகையான பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன. கூந்தபனை, சோளத்தட்டு, மசால்புல், தென்னை மட்டை, கரும்பு போன்றவைகளை யானைகள் மிகுந்து ருசித்து உண்ணுகின்றன. குறிப்பாக யானைகளுக்கு மிகவும் பிடித்த கூந்தபனை அதிக அளவில் கேரளாவில் மட்டுமே உள்ளதால், இவ்வகை முகாமிற்காக சிறப்பு ஏற்பாட்டின் மூலம் யானைகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. 



கோவில்களில் சாத உருண்டைகளை அதிகம் உண்ட யானைகள் பசுந்தீவனங்களை கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சி ஆர்வத்துடன் ருசித்து உண்ணுகின்றன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...