கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவையில், பிளாஸ்டிக் துகள்களை 5 சதவீதம் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டம்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவையில், பிளாஸ்டிக் துகள்களை 5 சதவீதம் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டம்.
கோவை நகரில் 4500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அதில் சுமார் 740 கி.மீ., சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு அமைத்தல், பழுதான மின் கம்பிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கடி சாலைகள் தோண்டுப்படுகின்றன.
மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகள் மழை காரணமாகவும், பராமரிக்கமால் இருந்ததன் காரணமாகவும் மாநகரில் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இந்தநிலையில், மாநகராட்சி நிர்வாகத்தால் சாலை மோசமாக உள்ள பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே மாநகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் ரோடு போட முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி கூறுகையில், "பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் கம்பெனியில் வாங்கிக் கொள்கின்றனர். இருந்தாலும், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாவது அதிகரிப்பதால், ரோடு போடுவதற்கான தார் கலவையில், 5 சதவீதம் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியிடம் உள்ள 19 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து அதனை சாலை அமைக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.
கோவை நகரில் 4500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அதில் சுமார் 740 கி.மீ., சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு அமைத்தல், பழுதான மின் கம்பிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கடி சாலைகள் தோண்டுப்படுகின்றன.
மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகள் மழை காரணமாகவும், பராமரிக்கமால் இருந்ததன் காரணமாகவும் மாநகரில் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இந்தநிலையில், மாநகராட்சி நிர்வாகத்தால் சாலை மோசமாக உள்ள பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே மாநகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் ரோடு போட முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி கூறுகையில், "பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் கம்பெனியில் வாங்கிக் கொள்கின்றனர். இருந்தாலும், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாவது அதிகரிப்பதால், ரோடு போடுவதற்கான தார் கலவையில், 5 சதவீதம் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியிடம் உள்ள 19 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து அதனை சாலை அமைக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.