கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பறை இசைத்தும், மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி போராட்டம் நடத்தினர்.

இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, அரசு கலைக்கல்லூரி முதல்வர் வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.