கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக காலையில் கணபதி ஹோம பூஜை சிறப்பு அபிக்ஷேம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கொடி உற்சவருடன் கோவிலை சுற்றி வந்து கொடி மரத்தின் முன் வைக்கப்பட்டது.

கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சாமியே சரணம் அய்யப்பா என்ற பலத்த கோஷத்துடன் ராஜகுரு சுப்புராஜ் குருசாமி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் தலைமை குருக்கள் சிவ ஸ்ரீ கண்ணன், சொற்சக்கரவர்த்தி சிவ ஸ்ரீ இராம விஜயகுமார் தலைமையில் தினமும் கணபதி ஹோமம், அபிக்ஷகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும், வரும் சனிக்கிழமை அன்னதானமும், மாலை பாலகொம்பு ஊர்வலம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அய்யப்பசாமி அலங்காரத்தேரில் முக்கிய வீதிகளில் பவணி வருகிறார். இந்த விழாவில் ஏராளமான அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.
முன்னதாக காலையில் கணபதி ஹோம பூஜை சிறப்பு அபிக்ஷேம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கொடி உற்சவருடன் கோவிலை சுற்றி வந்து கொடி மரத்தின் முன் வைக்கப்பட்டது.

கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சாமியே சரணம் அய்யப்பா என்ற பலத்த கோஷத்துடன் ராஜகுரு சுப்புராஜ் குருசாமி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் தலைமை குருக்கள் சிவ ஸ்ரீ கண்ணன், சொற்சக்கரவர்த்தி சிவ ஸ்ரீ இராம விஜயகுமார் தலைமையில் தினமும் கணபதி ஹோமம், அபிக்ஷகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும், வரும் சனிக்கிழமை அன்னதானமும், மாலை பாலகொம்பு ஊர்வலம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அய்யப்பசாமி அலங்காரத்தேரில் முக்கிய வீதிகளில் பவணி வருகிறார். இந்த விழாவில் ஏராளமான அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.