திருப்பூர்: வரும் 26ம் தேதி வரவுள்ள சூரிய கிரகணத்தை திருப்பூரில் 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: வரும் 26ம் தேதி வரவுள்ள சூரிய கிரகணத்தை திருப்பூரில் 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வருகின்ற 26ம் தேதி காலையில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது சூரிய கிரகணம் இந்த முறை திருப்பூர் கோவை ஈரோடு கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளனர். இந்த சூரிய கிரகணத்தை காண செய்துள்ள ஏற்பாடு குறித்து திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அவர்கள் பேசுகையில், சுமார் 350 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதிகளில் தெரிய உள்ள சூரிய கிரகணத்தை காணும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பிரத்யேக கண்ணாடிகள் தயார் செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும் அதே போல், வெறும் கண்ணால் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர்கள், காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டாலும் கூட சரியாக 9 மணியளவில் 3 நிமிடங்கள் வரை முழு சூரிய கிரகணமாக காண முடியும் என்று தெரிவித்தனர்.

வருகின்ற 26ம் தேதி காலையில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது சூரிய கிரகணம் இந்த முறை திருப்பூர் கோவை ஈரோடு கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளனர். இந்த சூரிய கிரகணத்தை காண செய்துள்ள ஏற்பாடு குறித்து திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அவர்கள் பேசுகையில், சுமார் 350 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதிகளில் தெரிய உள்ள சூரிய கிரகணத்தை காணும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பிரத்யேக கண்ணாடிகள் தயார் செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும் அதே போல், வெறும் கண்ணால் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர்கள், காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டாலும் கூட சரியாக 9 மணியளவில் 3 நிமிடங்கள் வரை முழு சூரிய கிரகணமாக காண முடியும் என்று தெரிவித்தனர்.