கோவை: உலக தெலுங்கு கூட்டமைப்பு மற்றும் கலா பிரதர்ஷினி கலை மற்றும் கலாச்சார மையம் இணைந்து கண்டசாலாவின் 97வது பிறந்த நாளை கோவை கிக்கானி பள்ளியின் அரங்கில் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அவரது கணவர் செளந்தரராஜன் கலந்து கொண்டு விழாவினை வழிநடத்தினர்.
கோவை: உலக தெலுங்கு கூட்டமைப்பு மற்றும் கலா பிரதர்ஷினி கலை மற்றும் கலாச்சார மையம் இணைந்து கண்டசாலாவின் 97வது பிறந்த நாளை கோவை கிக்கானி பள்ளியின் அரங்கில் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அவரது கணவர் செளந்தரராஜன் கலந்து கொண்டு விழாவினை வழிநடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் உலக தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் வி.எல்.இந்திரா தத் தலைமை வகித்து வரவேற்புரை நல்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஏவி குழும நிறுவனங்களின் தலைவர் ஏவி வரதராஜன், உலக தெலுங்கு கூட்டமைப்பு கோவை கிளையின் தலைவர் ரமா விஜயகுமார், துணைத் தலைவர் கே.கிருஷ்ண கோபால், கலா பிரதர்ஷினியின் நிர்வாக அறங்காவலர் மற்றும் கலை இயக்குனர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஷ்கார் விருது ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார். மேலும் இவ்விருது பரதக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம் மற்றும் சிதார் கலைஞர் பண்டிட் மிட்டா ஜனார்தனுக்கும் வழங்கி கெளரவ படுத்தினர். இந்தியாவின் அனைத்து கலைகளையும் ஒன்றிணைக்கும் வகையில் பாரத் கலா சங்கமம் அமைப்பு உருவாக்கினர்.

அதன் லோகோவினை தமிழிசை செளந்தரராஜன் மேடையில் வெளியிட்டார்.

பின்னர் விருதினை வழங்கி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டிப் பேசுகையில், கலை உலகுக்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது எனவும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர், எம்.கிருஷ்ணன் அவரது இனிப்பகத்தில் தயாரிக்கும் இனிப்பினைப் போல மிகவும் இனிமையானவர் என கூறினார்.
கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது இறைவனையே சேரும் எனவும், அதே போல் எளிமையும் இறைவனை மட்டுமே சென்றடையும் என்றும், இன்று விருது பெற்ற எம்.கிருஷ்ணன், கே.கல்யாணசுந்தரம், பண்டிட் மிட்டா ஜனார்தனனின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான பங்களிப்பு அவர்களை மட்டுமின்றி அவைகள் அனைத்தும் இறைவனையே சேரும் என்று பேசினார்.
பின்னர், விருதினை பெற்ற கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் பேசுகையில், இறைவனுக்காக யாகங்கள் நடத்தும் போது வேள்வித்தீயில் பல பொருட்களை இழக்க நேரிடும், அப்படி இழக்கப்படுவதற்காகவே படைக்கப்படும் போது மட்டுமே, அழகான மந்திரங்கள் ஓதப்படும் அந்த மந்திரங்கள் இறைவனை நாடி சென்று விடும் என்றும் எனக்கு வழங்கப்பட்ட விருது எங்கள் தொழிலாளர்களின் வியர்வைக்கு கிடைத்தது. நான் எனது இல்லத்திற்கு எடுத்து சென்றால் நிச்சயம் அது மிகையாகாது, இந்த விருதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வை உள்ளது. அதனால் நான் பெருமைப்படுகிறேன் அவர்களையும் பெருமை படுத்துகிறேன் என கூறினார். சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுவார் எந்த விருதும், பாராட்டுகளும் இறைவனிடம் இருந்து கிடைத்த பிரசாதமாக கொள்ள வேண்டும் என்று. இந்த விருந்து மக்களாகிய இறைவனிடம் இருந்து எனக்கு கிடைத்த பிரசாதமாக நான் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பரதக் கலைஞர்களான பார்வதி ரவி கண்டசாலா, கவிதா ராமு, லாவண்யா சங்கர் ஆகியோர் கண்டசாலாவின் பாடல்களுக்கு நடனமாடும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.