கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் போலீசாரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் போலீசாரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து ரயில் நிலைய வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை பாதுகாப்பை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்ய்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

பின்னர் பேசிய இந்திய மாணவர் சங்க துணைத் தலைவர் ரூபன் சக்கரவர்த்தி, இஸ்லாமியர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்களை புறக்கணிக்கும் வகையிலான சட்டமாக இந்த சட்டம் உள்ளதாகவும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.