வால்பாறை வாழை தோட்டத்தை அழித்து அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்

கோவை: வால்பாறை நகரில் வாழை தோட்டத்தை அழித்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறை நகரில் வாழை தோட்டத்தை அழித்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது வால்பாறை நகராட்சியின் சுற்றுலா மாளிகையின் பின்பகுதியில் தனி நபர்கள் வாழை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை அங்குள்ள வாழை மரங்களை ஒடித்து சாப்பிட்டுச் சேதப்படுத்தின. 



இதையடுத்து, காட்டு யானை அருகில் உள்ள சுற்றுலா மாளிகைக்குள் வராமல் தடுக்க தீ மூட்டி காவல் காத்தனர். பின்னர் காலையில் அங்கிருந்து சென்ற காட்டு யானை, தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வால்பாறை நகர பகுதியில் அதிகரித்து வரும் காட்டு யானைகள் நடமாட்டம் அப்பகுதி பொதுமக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...