நீலகிரி: உதகை அருகே அத்திக்கல் பகுதியில் நேற்று விவசாய நிலத்தில் மின் மாேட்டார் ஒயர் அறுந்து மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிந்தது தாெடர்பாக நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி உறவினர்கள் உடல்களை வாங்காமல் மருத்துவமனையி்ல் இரண்டு மணிநேரம் காத்திருப்பு பாேராட்டத்தில் ஈடுபட்டதால் உதகை அரசு மருத்துவனை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
நீலகிரி: உதகை அருகே அத்திக்கல் பகுதியில் நேற்று விவசாய நிலத்தில் மின் மாேட்டார் ஒயர் அறுந்து மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிந்தது தாெடர்பாக நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி உறவினர்கள் உடல்களை வாங்காமல் மருத்துவமனையி்ல் இரண்டு மணிநேரம் காத்திருப்பு பாேராட்டத்தில் ஈடுபட்டதால் உதகை அரசு மருத்துவனை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அத்திக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று பணிகளை முடித்துவிட்டு பாலன், குமார், மணியம்மா ஆகிய மூன்று பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது தண்ணீர் இரைக்கும் மின் மோட்டார் ஆப் செய்ய வந்தபோது மின் மோட்டாரில் இருந்த மின் கம்பி அறுந்து கம்பிவேலியில் விழுந்துள்ளது.

இதை கவனிக்காமல் கம்பியை பிடித்த மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சம்பவம் குறித்து இந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குசென்று உடல்களை கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் மூன்று பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில், நில உரிமையாளர் சந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று அரசு மருத்துவனையில் உறவினர்கள் காத்திருப்பாேராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்காெள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதி அளித்ததன் பேரில் பாேராட்டம் கைவிடப்பட்டது.