கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம் மற்றும் வால்பாறை வட்டார வள மையத்தின் மூலம் பள்ளி சிறார்கள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம் மற்றும் வால்பாறை வட்டார வள மையத்தின் மூலம் பள்ளி சிறார்கள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் கண், காது, மூக்கு தொண்டை, இருதயம் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் இ.சி.ஜி ஸ்கேன் பரிசோதனைகள் நடைபெற்றன.
மருத்துவ ஆலோசணைகளும் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் கார்த்திகேயன், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமணை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பழங்குடியின மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.