கோவை: திருப்பூரில் இருந்து போத்தனூருக்கு மங்களுர் விரைவு ரயிலில் பயணம் செய்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: திருப்பூரில் இருந்து போத்தனூருக்கு மங்களுர் விரைவு ரயிலில் பயணம் செய்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 25ம் தேதி திருப்பூரில் இருந்து போத்தனூருக்கு மங்களுர் விரைவு வண்டியில் கோவையை சேர்ந்த குமரகுருபரன் என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது, திருச்சி லால்குடியை சேர்ந்த திவாகர் என்பவர் குமரகுருபரனிடம் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் இருப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட திவாகரை கைது செய்தனர்.
பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவன் மீது ஏற்கனவே திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், நாகப்பட்டினம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், காந்தி மார்க்கெட், திருச்சி மாநகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்சி கோட்டை, திருச்சி மாநகர காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளிலும் மொத்தம் 10 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் காவல் துறை இயக்குநர் முனைவர். சைலேந்திரபாபு IPS, காவல்துறை தலைவர் வனிதா IPS, மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் அவர்கள் ஆனையின் பேரில் கோவை கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, போத்தனூர் இருப்பாதை காவல் ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் நடவடிக்கை எடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு சிபாரிசு செய்ததின் பேரில் குற்றவாளி திவாகரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த நவம்பர் 25ம் தேதி திருப்பூரில் இருந்து போத்தனூருக்கு மங்களுர் விரைவு வண்டியில் கோவையை சேர்ந்த குமரகுருபரன் என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது, திருச்சி லால்குடியை சேர்ந்த திவாகர் என்பவர் குமரகுருபரனிடம் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் இருப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட திவாகரை கைது செய்தனர்.
பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவன் மீது ஏற்கனவே திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், நாகப்பட்டினம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், காந்தி மார்க்கெட், திருச்சி மாநகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்சி கோட்டை, திருச்சி மாநகர காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளிலும் மொத்தம் 10 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் காவல் துறை இயக்குநர் முனைவர். சைலேந்திரபாபு IPS, காவல்துறை தலைவர் வனிதா IPS, மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் அவர்கள் ஆனையின் பேரில் கோவை கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, போத்தனூர் இருப்பாதை காவல் ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் நடவடிக்கை எடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு சிபாரிசு செய்ததின் பேரில் குற்றவாளி திவாகரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.