கோவை: உள்ளாட்சித் தேர்தலில் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கோவை: உள்ளாட்சித் தேர்தலில் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களுக்கும் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. இதில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. 1800-599-6000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 0422-2301586 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் துணை வட்டார வளர்ச்சி நிலையில் அலுவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் தெரிவிக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்கள் மக்கள் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.