கோவை: எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் சிங்காநல்லூரில் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என நல சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் சிங்காநல்லூரில் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என நல சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியபோது, விற்பனை செய்யப்பட்ட வீடுகளுக்கு எதுவும் செய்து தர முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் பழுதடைந்ததுள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என நல சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பேசுகையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கைகளை ஏற்று, வேண்டிய வசதிகளை செய்து தருவதாக அரசு உறுதி அளித்து உள்ளதாகவும் ஆனால், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு சிலர் அரசியல் செய்வதாகவும், இங்கு ஏ.பி.சி என மூன்று பிரிவுகளாக உள்ள நிலையில், எந்த அரசியல் கட்சியின் தலையீடு இல்லாமல் புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் பலனடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியபோது, விற்பனை செய்யப்பட்ட வீடுகளுக்கு எதுவும் செய்து தர முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் பழுதடைந்ததுள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என நல சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பேசுகையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கைகளை ஏற்று, வேண்டிய வசதிகளை செய்து தருவதாக அரசு உறுதி அளித்து உள்ளதாகவும் ஆனால், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு சிலர் அரசியல் செய்வதாகவும், இங்கு ஏ.பி.சி என மூன்று பிரிவுகளாக உள்ள நிலையில், எந்த அரசியல் கட்சியின் தலையீடு இல்லாமல் புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் பலனடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.