கோவை: கோவை மாநகர, மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் உட்பட இருவர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாநகர, மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் உட்பட இருவர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில வருடங்களாகவே கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா அறிவுரையின் பேரில், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இருவேறு காவல்நிலையங்களில் இரண்டு பேர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 61 வயதான ஷேக் பாவா என்பவர் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதே போல, கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் முகமதுவாசிம் (26). இவர் மாநகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு காதல் ஆசை காட்டி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பெற்றோர்கள் யாரும் இல்லாத வேளையில் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து எழுந்த புகாரின் பேரில், ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசார் முகமது வாசிம் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில வருடங்களாகவே கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா அறிவுரையின் பேரில், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இருவேறு காவல்நிலையங்களில் இரண்டு பேர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 61 வயதான ஷேக் பாவா என்பவர் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதே போல, கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் முகமதுவாசிம் (26). இவர் மாநகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு காதல் ஆசை காட்டி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பெற்றோர்கள் யாரும் இல்லாத வேளையில் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து எழுந்த புகாரின் பேரில், ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசார் முகமது வாசிம் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.